யாழில் புத்தர் சிலையை உடைத்த இளைஞன் கைது

Published By: Digital Desk 4

02 May, 2021 | 09:33 PM
image

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதிக்கு அண்மையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்த இளைஞன் அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார். 

புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த கொண்ட காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சிலையை உடைத்த இளைஞனை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். 

குறித்த இளைஞன் மது போதையில் காணப்படுவதால் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க முடியவில்லை என காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53