இந்தியாவின் மும்பையில் பாலியல் தொழிலுக்காக 16 வயது மகளை 5 இலட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையின் கோவண்டியைச் சேர்ந்த ஒரு பெண் அவளின் 16 வயது மகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும், இதற்காக ஆட்களை தேடிக்கொண்டிருப்பதாகவும் பொலிஸிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணிடம் பேரம் பேசும் நபர் போன்று நாடகமாடிய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்தனர்.
குறித்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்த பேசிய போது, தனது 16 வயது மகளை 5 லட்சம் ரூபாய்க்கு விலை பேசியுள்ளார்.
பின்னர் 4 இலட்சத்து 25 ஆயரம் ரூபாயிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு,அதில் 50 ஆயிரம் முற்பணம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முற்பணம் தொகையை வாங்கியதும் கையும் களவுமாக அந்த பெண்ணை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், 3 முறை திருமணமான அந்த பெண் ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதும் தனது கணவருக்கு பிறந்த மகளை விற்க முயன்றதும் தெரியவந்தது.
மேலும், கைது செய்யப்பட்ட பெண் தனது சகோதரியின் மகளின் திருமணத்தை நடத்துவதற்காக 5 இலட்சம் ரூபாயிற்கு பெற்ற மகளை விற்பனை செய்ய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM