நல்லாட்சிக்கு தோள் கொடுத்திருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியை தேர்தலு க்கு முன்னதாக விலை கொடுத்து வாங்கிவிடலாம் என சிலர் எண்ணினர். அத்துடன் பணத்தை வீசி முற்போக்கு கூட்டணியை சீர்குலைத்துவிடலாம் என்றும் திட்டமிட்ட னர். ஆனால் அவர்களது எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறவில்லை என்று கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நல்லாட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு புறக்கோட்டை புடைவை வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற சிலர் கனவு கண்டதாக தெரிவித்தார்.
இதற்காக பல கோடி ரூபாய்களை தமக்கு வழங்குவதற்கு ஒரு குழுவினர் முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார் .
கடந்த 2005 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து வடக்கு கிழக்கு மக்களை வாக்களிக்காமல் செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அன்று தோற்கடித்ததை போன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினை சீர்குலைத்து விட எம்மை அணுகினர் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM