சுபத்ரா
முன்னாள் படை அதிகாரிகளை அரச நிர்வாகத்துக்குள் உள்ளீர்க்கும் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், தற்போதைய அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து பின் வாங்கத் தயாரில்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறது.
முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சுமங்கல டயஸ், இத்தாலிக்கான தூதுவராகவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்படுவதற்கு, உயர்பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு கடந்த வாரம் அனுமதி அளித்திருக்கிறது.
வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் போன்ற உயர்மட்ட நியமனங்களை செய்யும் போது, உயர்பதவிகளுக்கான பாராளுமன்ற குழுவின் அங்கீகாரத்தைப் பெறுகின்ற நடைமுறை, 19ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னரே கொண்டு வரப்பட்டது.
ஆனாலும், தற்போதைய அரசாங்கம் இந்த நடைமுறையை கேலிக்கூத்தாக மாற்றி விட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுப் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்ட பின்னர், டிசம்பர் மாதமே, அதன் செயலாளராக, மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டு விட்டார்.
ஜனாதிபதியினால் அந்த நியமனம் வழங்கப்பட்டு, அவர் கடமையைப் பொறுப்பேற்று பல மாதங்களாகி விட்ட பின்னர் தான், பாராளுமன்ற குழுவில் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-02#page-7
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM