ஆர்.ராம்
இலங்கை ஒரு பல்லினத்தீவு. இங்கு வாழும் அனைத்து இனங்களுக்கென்றும் வரலாற்று ரீதியான தனித்துவங்கள் உள்ளன. அவ்வினங்கள் தமக்கென்று தனித்துவமாக உள்ள அரசியல், பொருளாதார, கலாசார விடயங்களை பற்றி ஒழுகுவதற்கான சகல உரித்துக்களையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறான உரித்துக்கள் அனைத்தும் அந்தந்த இனங்களுக்கு காணப்படும் அடிப்படை உரிமைகளாகும்.
அவ்விதமான அடிப்படை உரிமைகளுக்கான சட்ட ஏற்பாடுகள், நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச சமவாயச் சட்டங்களிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில், ஒவ்வொரு ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலத்தின் போதும் அந்த அடிப்படைச் சட்டங்களை பிரயோக ரீதியாக பயன்படுத்துவதில் ஒவ்வொரு இனக் குழுமங்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
இந்த ஏற்ற இறக்கங்களையே சாதாரண மக்கள் தமக்கான 'ஜனநாயக வெளிகளாகக்' கருதுகின்றனர். இந்த ஜனநாயக வெளிகள் அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் குணாம்சங்களுக்கு ஏற்ப மாறுபட்டதாகவே இருக்கின்றது. நிரந்தரமான 'ஜனநாயக வெளியொன்று' தற்போது வரையில் நீடிப்பதாக இல்லை.
2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி வரையில் நிலவிய ஆட்சிக்காலத்தில் 'ஜனநாயக வெளியானது 'சற்றே அதிகமாக' இருந்தாக பொதுப்படையில் கூறப்படுகின்றது. ஆனாலும், கடந்த ஒரு வருடமும் ஐந்து மாதங்களாக 'ஜனநாயக வெளி மிகச் சுருங்கி விட்டதாக' சாதாரண பொது மக்களே பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக, சீர் திருத்தவாதிகளாக தம்மைச் சித்தரித்து மக்கள் ஆணை பெற்று அதிகாரத்தில் உள்ள தற்போதைய ஆட்சியாளர்களிடத்தில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, பொதுவெளியில் வெளிப்படைத் தன்மையுடன் தமது அபிலாஷகளை பெறுவதற்காக முனையும் தரப்பினருக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-02#page-9
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM