நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அந்தவகையில் 4 மாவட்டங்களில் உள்ள 7 கிராம சேவகர் பிரிவுகளும் ஒரு பொலிஸ் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலேயே இவ்வாறு சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வலான வடக்கு, வேகட மேற்கு, பள்ளமுல்ல கிழக்கு மற்றும் கிரிபேரிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பொலிஸ் பிரிவின் நீலந்தந்தஹின்ன கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் உவர் மலை கிராமசேவகர் பிரிவு, உப்புவெளி பொலிஸ் பிரிவின் அன்புவழிபுரம் கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM