இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கு இத்தாலி தடை!

Published By: Vishnu

30 Apr, 2021 | 08:30 AM
image

இந்தியாவில் கொரோனா வைரஸ் அவசரநிலைக்கு இடையில் பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது.

அத்துடன் மேற்கண்ட நாடுகளிலிருந்து அண்மையில் நாட்டுக்கு திரும்பி வந்த குடியிருப்பாளர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளையும் இத்தாலி கடுமையாக்கியுள்ளது.

ஏப்ரல் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய கட்டளை ஒன்றில், அந் நாட்டு சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வருகை தருவோருக்கானா தடையை நீட்டித்தார்.

புதிய சட்டத்தின் கீழ், இத்தாலியில் நிரந்தரமாக வாழும் இத்தாலிய குடிமக்கள் மட்டுமே மூன்று நாடுகளில் இருந்து நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். 

முன்னதாக இத்தாலியில் வசிக்கும் வெளிநாட்டினரும் திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து திரும்பும் இத்தாலிய குடிமக்களுக்கு தனிமைப்படுத்தல் விதிகள் தற்சமயம் புதிய சட்டத்தின் கீழ் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பத்து நாட்கள் ஒரு கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஹோட்டலில் செலவிட வேண்டும், அங்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவர்.

மேற்கண்ட மூன்று நாடுகளிலிருந்து வருகை தரும் இத்தாலிய குடிமக்கள் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக பி.சி.ஆர். ‍சோதனை மேற்கொண்டு, அதில் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

வருகைக்கு பின்னர் மற்றொரு சோதனையைப் மேற்கொள்ள வேண்டும். இறுதியாக பத்து நாட்கள் தனிமையில் மூன்றாவது சோதனை எடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59