திருகோணமலையில் 60 க்கும் மேற்பட்டோர் கைது

Published By: Digital Desk 4

29 Apr, 2021 | 04:43 PM
image

திருகோணமலை மாவட்டத்தின் சில தினங்களாக கொவிட் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 7 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இன்று (29) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அரசாங்க அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

சீனக்குடா, காவட்டிக்குடா, லிங்கன் நகர், கோயிலடி, சுமேதங்கரபுர, மட்கோ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகும். 

இதனைவிட பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவும் ஏலவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உலர் உணவு மற்றும் கொடுப்பனவுகள் காலக்கிரமத்தில் வழங்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உலர் உணவுகளும் விரைவில் வழங்கப்படும். 

மக்கள் இச்சந்தர்ப்பத்தில் அநாவசிய பயணங்களை தவிர்த்து வீடுகளிலே தங்கியிருப்பதுடன் சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல் , கைகளை அடிக்கடி கழுவல், சமூக இடைவெளி பேணல் , ஒன்றுகூடல்களை தவிர்த்தல் என்பன பிரதானமானதாகும்.

முகக்கவசமின்றி பொறுப்பற்ற முறையில் செயற்படுபவர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .நேற்று மாத்திரம் மாவட்டத்தில் முகக் கவசம் இன்றி நடமாடிய 60 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தற்போது பரவியுள்ள கொவிட் பரவலை ஒழிக்க மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபர் இதன்போது வேண்டிக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55