காணாமல்போன 3 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் : தேடுதல் வேட்டையில் பொலிஸார்

Published By: Digital Desk 3

29 Apr, 2021 | 12:25 PM
image

இந்தியாவில் பெங்களூரில் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், 3000 கொரோனா தொற்றாளர்கள் காணமால் போயுள்ளனர். 

இவ்வாறு காணமால்போனவர்கள் தங்கள் தொலைபேசி இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்,  காணாமல் போனவர்களால் வைரஸ் பரப்புவதற்கு சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம்  கர்நாடகாவில் 39,047 தொற்றாளர்களும், 229 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், பெங்களூர் நகரில் 22,596 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் கர்நாடகா மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவிக்கையில்,

கடந்த ஒரு வருடகாலமாக கொரோனா நோயாளிகள் காணாமல் போவது தொடர்பான பிரச்சினை இடம்பெற்று வருகிறது.

கொரோனா பாதித்தவர்கள் காணாமல் போவது கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு இலவசமாக மருந்துகளை கொடுக்கிறோம். இதன் மூலம் 90 சதவீதம் பேர் குணமடைகிறார்கள், ஆனால் ஆனால் கொரோனா பாதித்தவர்கள் தங்கள் தொலைபேசி இயக்கதை நிறுத்தி வைத்துவிடுகிறார்கள்.

பின்னர் மோசமான நிலையில் வைத்தியசாலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை வசதிகள் கிடைப்பது கடினமாகிறது. இதுதான் இந்த மாநிலத்தில் நடக்கிறது. பெங்களூரை பொருத்தவரை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவடன் தங்கள் தொலைபேசி இயக்கதை நிறுத்தி வைத்துவிட்டு வீடுகளை விட்டு சென்றுவிடுகிறார்கள்.

அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றி தெரியப்படுத்தவில்லை, இது பாரிய பிரச்சினையாகும்.

அவர்கள் எங்கே செல்கிறார்கள் என தெரியவில்லை. உங்களை இரு கரம் கூப்பி கேட்கிறேன். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் தொலைபேசி இயக்கதை நிறுத்தி வைக்காதீர்கள் , வீடுகளை விட்டு எங்கும் செல்லாதீர்கள். கடைசி நேரத்தில் தீவிர சிகிச்சை பெறுவதை தவிருங்கள். சிலர் வெளிமாநிலங்களுக்கு கூட சென்றுவிடுகிறார்கள். அவர்களை பொலிஸார் கண்டுபிடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17