இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - வேலுசாமி இராதாகிருஸ்ணன்

Published By: Digital Desk 3

29 Apr, 2021 | 08:42 AM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை நடத்த தயார் என்று அரசாங்கம் கூறினாலும் , ஆளுங்கட்சிக்குள்ளேயே இதில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. எத்தகைய சிக்கல் காணப்பட்டாலும் இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிக்கமைய மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சி என்ற ரீதியில் தொடர்ச்சியாக இதனை நாம் வலியுறுத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறுகின்ற போதிலும் , அதனை எந்த முறைமையில் நடத்துவது என்பது அரசாங்கத்திற்கு பெறும் பிரச்சினையாகக் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

வேலுசாமி இராதாகிருஸ்ணன்

இந்தியாவிற்கு அளித்துள்ள உறுதியை நிறைவேற்றும் வகையிலும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மாகாணசபை விவகாரத்தில் தீர்க்கமானதொரு முடிவை அரசாங்கம் வழங்க வேண்டும். ஆனால் உண்மையில் தேர்தல் நடத்தப்படுமா என்று உறுதியாகக் கூற முடியாது.

மாகாணசபைத் தேர்தல் துரிதமாக நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா பல சந்தர்ப்பங்களில் அழுத்தம் பிரயோகித்துள்ளது. ஆனால் கொவிட் நிலைமையைக் காரணம் காட்டி எதையுமே செய்ய முடியாது என்ற நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் , கொவிட் , எண்ணெய் இறக்குமதி , உரம் உள்ளிட்ட சகல விடயங்களிலும் அரசாங்கத்தின் வீழ்ச்சி வெளிப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளமை , ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கைது செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றமை யாரேனுமொருவரை திருப்திப்படுத்துவதற்கான செயற்பாடுகளா என்ற சந்தேகம் எழுகிறது.

பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படாமல் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளமை தவறு. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்படுவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது பிழையான முடிவாகும். எதிர்காலத்தில் மீண்டும் இது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமலிருக்க ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08