தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 187 பேர் கைது!

Published By: Vishnu

29 Apr, 2021 | 08:16 AM
image

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 187 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 31 முதல் குறித்த குற்றச்சாட்டுக்காக இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று பொலிஸார் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 1,240 முசக்கர வண்டிகள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தமாக 6,110 முச்சக்கர வண்டிகள் பரிசோதிக்கப்பட்டன.

இவற்றுள் பெரும்பலானா முச்சக்கர வண்டிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையையும் விட அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறும் நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாழியாக காணப்பட்டால் 6 மாத கால சிறை தண்டணை மற்றும் 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனால் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கொவிட் அனர்த்தத்தின் காரணமாக ஏதேனும் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்குமாயின் சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள் அதே பிரதேசத்தில் தங்கியிருக்க வேண்டும். அதேபோன்று வெளி நபர்கள் இந்த பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38