தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 187 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 31 முதல் குறித்த குற்றச்சாட்டுக்காக இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று பொலிஸார் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 1,240 முசக்கர வண்டிகள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தமாக 6,110 முச்சக்கர வண்டிகள் பரிசோதிக்கப்பட்டன.
இவற்றுள் பெரும்பலானா முச்சக்கர வண்டிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையையும் விட அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறும் நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாழியாக காணப்பட்டால் 6 மாத கால சிறை தண்டணை மற்றும் 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனால் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட் அனர்த்தத்தின் காரணமாக ஏதேனும் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்குமாயின் சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள் அதே பிரதேசத்தில் தங்கியிருக்க வேண்டும். அதேபோன்று வெளி நபர்கள் இந்த பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM