தனிமைப்படுத்தலை மீறினால் அபராதம், சிறை முழுவிபரம் இதோ...! 

Published By: Digital Desk 4

28 Apr, 2021 | 10:08 PM
image

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் , ஆறு மாதகால சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பான அறிவிப்பு !  | Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதன்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சட்டவிதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று புதன்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொணராகலை , திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளிலே அதிகமானவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் , அதற்கமைய இதுவரையில் 3900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அத்தியவசிய தேவையின்றி , அங்கிருந்து வெளியேற முடியாது. அதேபோன்று வெளி பிரதேசங்களில் இருப்பவர்கள் அந்த பகுதிகளுக்கு உட்பிரவேசிக்க முடியாது.

 அவ்வாறு செயற்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.அத்தகைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் சீருடை மற்றும் சிவில் உடையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55