(செ.தேன்மொழி)
களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் வீசப்பட்ட பொதிகளிலிருந்து போதைப்பொருட்கள், தொலைபேசி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
களுத்துறை சிறைச்சாலையில் மதிலுக்கு மேல் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய இரு பொதிகள் வீசப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இரவு வேளையிலேயே இவ்வாறு பொதிகள் எறியப்பட்டுள்ளன.
இதன்போது கடந்த செவ்வாய்க்கிழமை எறியப்பட்ட பொதியிலிருந்து , ஹெரோயின் போதைப் பொருட்கள் என்று கருதப்படும் போதைப்பொருள் அடங்கிய 158 பக்கற்றுகளும், 20 கிராம் கஞ்சா போதைப் பொருள், இரு தொலைபேசிகள், 30 போதை வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் மறுநாள் புதன்கிழமை எறியப்பட்டிருந்த பொதியிலிருந்து , 6 தொலைபேசிகள் , 10 புகையிலைகள், 2 மின்னேற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் ,கைப்பற்றப்பட்ட தடைச் செய்யப்பட்ட பொருட்களை களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM