இந்தியாவின், அசாமில் 6.4 ரிச்டெர் அளிவிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையம் (EMSC) கூறியுள்ளது.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா, "அசாமில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. விவரங்களுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அசாமில் பதிவான இந்த நிலநடுக்கம் அசாம், வட வங்கம் மற்றும் வடகிழக்கின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின் கருத்தப்படி, ரிச்டெர் அளவுகோலில் 6.4 அளவைக் கொண்ட நிலநடுக்கம் அசாமின் தேஸ்பூரில் தோன்றியது.
முதல் பூகம்பம் காலை 7:51 மணிக்கு பதிவாகியுள்ளது மற்றும் நில அதிர்வு மையத்தின்படி, இது அசாமில் தேஸ்பூருக்கு மேற்கே 43 கி.மீ தொலைவில் மையமாக இருந்தது.
முதல் பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, ஒன்று காலை 7:55 மணியளவிலும், மூன்றாவது அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்தும் ஏற்பட்டுள்ளது.
இந் நிலநடுக்கத்தினால் உண்டான உயிர் அல்லது சொத்து சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM