சத்ரியன்
'' விஜயதாஸவின் அரசியல் ஒழுங்கு, அவருக்கு உள்ள பின்னணி, அவரைப் பகைத்துக் கொண்ட ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதி இப்படிப் பல காரணிகள், ஆளும்கட்சிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் கொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் விஜயதாஸ பெருங்குழப்பத்தை ஏற்படுத்தினால் எல்லாம் தலைகீழாக மாறி விடுமோ என்று அஞ்சுகிறது ஆளும் தரப்பு.''
அபயராமய விகாரையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் சேர்ந்து, நாடு சீனாவின் கொலனியாக மாறப் போகிறது என்றும், அதனை அனுமதிக்கப் போவதில்லை என்றும், பகிரங்கமாக அரசாங்கத்தை விமர்சித்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் விஜயதாஸ ராஜபக்ஷ.
அதற்கு அடுத்த நாள், ஜனாதிபதி தொலைபேசியில் அழைத்து கீழ்த்தரமான வார்த்தைகளால் தன்னைத் திட்டினார் என்றும், அதே பாணியில் அவருக்கு பதிலளித்தேன், எனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக உணர்கிறேன் எனக் கூறி நாட்டையே பரபரப்பான நிலைக்கு கொண்டு சென்றிருந்தார் அவர்.
இப்போது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், விஜயதாஸ ராஜபக்ஷ கலகக்காரனாக மாறியிருக்கிறார்.
பலம்வாய்ந்த ஒரு அரசாங்கத்துக்கு எதிராக, 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்துள்ள ஜனாதிபதிக்கு எதிராக, கருத்து வெளியிடுவது ஒன்று சாதாரண விடயமல்ல.
ஏற்கனவே, இந்த அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பின்புலத்தைக் கொண்டவர்களும், அரசல் புரசலாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-25#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM