(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு என சட்ட விதிமுறைகள் இன்றி மக்களின் ஒத்துழைப்புடன் தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தவே எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொவிட் பரவல் தொடர்பான இன்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாடு தற்போது அபாய நிலையிலுள்ளது. எனவே அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களும் அரசாங்கம் , சுகாதார அமைச்சு ஏனைய சுகாதார தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் எத்தகைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும்.
ஜேர்மன் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கூட தற்போது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.
எமது அயல் நாடாள இந்தியாவிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காணப்பட்டதை விட தற்போது உருமாறிய வைரஸ் பரவலே இதற்கான காரணமாகும். இது எமக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும்.
எனவே இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு ஒவ்வொரு பிரஜைகளும் தமது கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
எனவே இம்முறை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அல்லது போக்குவரத்து கட்டுப்பாடு என்பவற்றை விதித்து சட்டத்தின் மூலமாக அன்றி , முழுமையாக மக்களின் ஒத்துழைப்புடன் நிலைமையை கட்டுப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM