சலுகைப்பொதியில் ஊழல் செய்ததாக நிருபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை துறப்பேன் - பந்துல

Published By: Digital Desk 3

23 Apr, 2021 | 04:04 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ச.தொ.ச உட்பட சுப்பர் மார்கட்களில் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த சலுகை பொதிகளில் ஊழல் - மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை ஒரு மணித்தியாலத்தில் துறந்துச் செல்வேன் என வர்த்தக அமைச்சர் பந்துல அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பரிமாற்றங்கள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் புத்தாண்டு காலப்பகுதியில் பொது மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சலுகை பொதியொன்று ச.தொ.ச உட்பட சுப்பர் மார்க்கட்களில் பெற்றுக்கொடுத்தோம். 

ஆனால், இந்த பொதியில் தரமற்ற பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களை கைதுசெய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் சலுகைகளுக்கு அபக்கீரித்தியை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சமூக நீதிக்கான இயக்கம் கொம்பனிவீதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

நாம் இல்லை முறைப்பாடுகளை செய்துள்ளோம். அத்துடன் சதொச நிறுவனத்தின் தலைவர், கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர், தேயிலை வழங்குனர் சபையும் கொம்பனிவீதி பொலிஸில் இதுதொடர்பில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.

 சலுகை பொதியில் ஊழல் - மோசடிகள் இடம்பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால் ஒரு மணத்தியாலம்கூட பாராளுமன்றத்தில் இருக்க மாட்டேன் என்பதுடன் பதவியை இராஜனாமா செய்துவிட்டு செல்வேன்.மனசாட்சிக்கு உட்பட்டு அர்ப்பணிப்புடன் நாம் செயற்படுகின்றோம். ஆகவே, நான் எவரையும் கைதுசெய்யுமாறு கூறவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36