(நா.தனுஜா)
கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தற்போதைய வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், பூகோள அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தற்போதைய வடிவத்திலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருந்தால், கடன் நிதிநெருக்கடிகளையும் பூகோள அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியேற்படலாம்.
அதுமாத்திரமன்றி நிதி ரீதியான மோசடிகள் இடம்பெறுவதற்கான ஒரு மத்திய நிலையமான கொழும்பு மாற்றமடையும். அதற்குப் பதிலாக உண்மையிலேயே நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான முன்னேற்றமடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் முதலீடுகளை இழக்கவேண்டிய நிலையேற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM