கரோலின் ஜூரி தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை திருமதி உலக அழகுராணியை தெரிவு செய்யும் அமைப்பு எற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகுராணி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் தற்போது 2020 உலக அழகுராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து திருமதி உலக அழகி அமைப்பு ஒரு அறிக்கையில்,
கரோலின் ஜூரியின் தனது பட்டத்தை துறப்பது குறித்த தீர்மானத்தை அவர் சுயமாக எடுத்துள்ளார். அவரது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோலின் ஜூரியின் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகவும் திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் திருமணமான அழகு ராணியை தெரிவு செய்யும் போட்டியில் வெற்றிப் பெற்று முடிசூடிய போது, புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் எனக் கூறி கரோலின் ஜூரி அதனை பலவந்தமாக பறித்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தை அணிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM