ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணியோத்சவம் ஜனாதிபதி தலைமையில்...

Published By: Robert

19 Aug, 2016 | 09:39 AM
image

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பொலனறுவை சிறி விஜயபா பிரிவெனாவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் சங்கைக்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த நாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணியோத்சவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பொலனறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

பொலனறுவை மாவட்டத்தின் பிரதம சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பொலனறுவை சிறி விஜயபா பிரிவெனாவின் ஓய்வுபெற்ற பிரதி பிரிவெனாதிபதி சங்கைக்குரிய அலவ்வ ஸ்ரீ ஞானவாச நாயக்க தேரருக்கு அப் பதவிக்குரிய ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி; வழங்கி வைத்தார். 

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சிறந்த மற்றும் ஒழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களின் போது இவ்வாறான கல்வியறிவுள்ள, அறிவாளிகளான மற்றும் முன்மாதிரியான தேரர்களுக்கு கௌரவப் பட்டம் வழங்கப்பட்டமையானது ஒரு முக்கிய நிகழ்வாகும் எனக் குறிப்பிட்டார். 

தேரவாத பௌத்த மதம் தொடர்பான சர்வதேச மத்திய நிலையமாக எமது நாட்டை மாற்றும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் என்ற வகையில் தான் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக கல்வியறிவுள்ள, அறிவாளிகளான பௌத்த தேரர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியவசியமாக உள்ளதெனத் தெரிவித்தார். 

உடரட்டை அமரபுர மகா நிக்காயாவின் பதில் மகாநாயக்கர் ராஜகீய பண்டிதர் சங்கைக்குரிய நுவரெலியா சந்திரஜோதி நாயக்க தேரர், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாதிபதி சங்கைக்குரிய வெலமிட்டியாவ குசலதம்ம நாயக்க தேரர், சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிபால கம்லத், நாலக்க கொலொன்னே மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பெருந் தொகையான பௌத்த மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53