(செ.தேன்மொழி)
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்புப்பணத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக கருதப்பட வாய்ப்புள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சி தலைவர் புபுது ஜாகொட எச்சரிக்கை விடுத்தார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னிலை சோஷலிச கட்சியினரினால் அமைதிவழி ஆர்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கறுப்புப்பண சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இத்தகைய வர்த்தகர்களின் தளமாக துறைமுக நகரம் மாற்றப்படும். இதனால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்பு பொருளாதாரமாகவே கருதப்படும்.
இதேவேளை , இந்த துறைமுக நகர சட்டமூலத்தின் ஊடாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் அதிகார போட்டி மேலும் உக்கிரமடைவதுடன் , அதன் காரணமாக நாட்டு மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். மேலும் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக சீனாவின் ஆதிக்கம் நாட்டுக்குள் அதிகரிக்கும். இதனால் இந்நாட்டு தொழிலாளர்களுக்கு காணப்படும் உரிமைகள் இரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM