கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் 13 கோடி மக்களை பாதித்து, இன்றும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கிருமி, தற்போது உருமாற்றம் பெற்று புதிய வடிவில் இரண்டாவது அலையாக மக்களை தாக்கி வருகிறது. இதற்குரிய புதிய அறிகுறிகளை மருத்துவர்கள் கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
இதுவரை கொரோனா வைரஸ் தாக்கியதன் அறிகுறியாக காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்டவைகளை மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டு இருந்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் கிருமி உருமாற்றம் பெற்று பரவி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து தெரிவித்திருக்கிறார்கள்.
உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கிருமி தாக்கியவர்களுக்கு வெவ்வேறு அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் கண்களில் பாதிப்பு, கண்கள் வறண்டு காணப்படுதல், தொடர்ச்சியான இருமல், தலைவலி, கண்களில் நிறமாற்றம், நாக்கு உலர்தல், உணவு உண்பதில் சிரமம், உமிழ்நீர் சுரப்பதில் குறைபாடு என பல்வேறு அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இத்தகைய அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவ உதவியை பெற்று அவர்களின் ஆலோசனைப்படி கொரோனா தடுப்பு ஊசி மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட பாதுகாப்பு மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.
அத்துடன் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றையும் இவர்கள் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
டொக்டர் ஸ்ரீ தேவி,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM