(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை நாளை அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.
மாகாண சபை தேர்தல், மே தின கூட்டம் மற்றும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் உள்ளிட்ட விடயங்கள் இப்பேச்சுவார்த்தையின் போது ஆராயப்படவுள்ளன.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் மாகாண சபை தேர்தல் குறித்து அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனை குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளன. குறித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்களுக்கு கூட்டணியில் 11 பங்காளி கட்சிகள் ஆரம்பத்தில் எதிர்பினை வெளிப்படுத்தினார்கள்.
மே தின கூட்டம் தொடர்பில் பங்காளி கட்சிகளின் உறுதியான தீர்மானம் இச்சந்திப்பின் போது அறிவிக்கப்படவுள்ளன. கூட்டணியின் ஊடாக மே தின கூட்டத்தை நடத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், மே தின கூட்டத்தை தனித்து நடத்த வேண்டும் என பிறிதொரு தரப்பினரும் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
லங்கா சமசமாஜ கட்சி, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இடதுசாரி முன்னணி உட்பட பிரதான 5 பங்காளி கட்சிகள் மே தின கூட்டத்தை தனித்து நடத்துவதாக குறிப்பிட்டுள்ளன. மே தின கூட்டம் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இதுவரையில் உறுதியான தீர்மானத்தை இதுவரையில் அறிவிக்கவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற, இராஜாங்க உறுப்பினர்கள் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ள நிலையில், மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் இணைந்தே போட்டியிடும் தனித்து செல்லும் நோக்கம் ஏதும் கிடையாது என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கல், இச்சட்ட மூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்துக்கள், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ அச்சுறுத்தல் விடுத்தார் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்து ஆகியவை தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பிலான சட்ட மூலம் குறித்து அரசாங்க தரப்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளன. பிரதமர் தலைமையில் இடம் பெறும் இப்பேச்சுவார்த்தை பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM