கடந்த 72 மணித்தியாலத்தில் 40 பேர் பலி

18 Apr, 2021 | 06:28 AM
image

(செ.தேன்மொழி)

வீதி விபத்துகள் காரணமாக நேற்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 72 மணித்தியாலத்திற்குள் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் வாகன சாரதிகள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

வீதி விபத்துகள் காரணமாக நேற்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த கடந்த 72 மணித்தியாலயத்திற்குள் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி 14 பேரும் , 15 ஆம் திகதி 16 பேரும் நேற்று முன்தினம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

வாகன சாரதிகளின் கவனக்குறைப்பாட்டின் காரணமாகவே இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன் , இந்த வார இறுதி தினத்தில் நாம் இது தொடர்பில் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சித்திரை புத்தாண்டு பண்டிகை காரணமாக வீடுகளுக்குச் சென்றிருந்தவர்கள் அனைவரும் தற்போது தொழில் நிமித்தம் மீண்டும் செல்கின்றனர்.

இதன்போது வெளி மாவட்டங்களிலிருந்து பெருந்தொகையானவர்கள் மேல்மாகாணத்திற்கு வருகை தருகின்றனர். இந்த காலப்பகுதியில் பயணிகள் மற்றும் சாரதிகள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

இதேவேளை,  தற்போது அதிவேக நெடுஞ்சாலைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அவை தொடர்பில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது அதிகூடிய வேகத்தில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் வீதி சட்ட விதிகளுக்கு புறம்பாக பயணிக்கும் வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.   

அதனால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது வேறு விடயங்களில் கவனம் செலுத்துவடை விட வீதி மற்றும் வாகனம் தொடர்பிலே கவனம் செலுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27