(செ.தேன்மொழி)
வீதி விபத்துகள் காரணமாக நேற்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 72 மணித்தியாலத்திற்குள் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் வாகன சாரதிகள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
வீதி விபத்துகள் காரணமாக நேற்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த கடந்த 72 மணித்தியாலயத்திற்குள் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி 14 பேரும் , 15 ஆம் திகதி 16 பேரும் நேற்று முன்தினம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாகன சாரதிகளின் கவனக்குறைப்பாட்டின் காரணமாகவே இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன் , இந்த வார இறுதி தினத்தில் நாம் இது தொடர்பில் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
சித்திரை புத்தாண்டு பண்டிகை காரணமாக வீடுகளுக்குச் சென்றிருந்தவர்கள் அனைவரும் தற்போது தொழில் நிமித்தம் மீண்டும் செல்கின்றனர்.
இதன்போது வெளி மாவட்டங்களிலிருந்து பெருந்தொகையானவர்கள் மேல்மாகாணத்திற்கு வருகை தருகின்றனர். இந்த காலப்பகுதியில் பயணிகள் மற்றும் சாரதிகள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.
இதேவேளை, தற்போது அதிவேக நெடுஞ்சாலைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அவை தொடர்பில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது அதிகூடிய வேகத்தில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் வீதி சட்ட விதிகளுக்கு புறம்பாக பயணிக்கும் வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
அதனால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது வேறு விடயங்களில் கவனம் செலுத்துவடை விட வீதி மற்றும் வாகனம் தொடர்பிலே கவனம் செலுத்த வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM