(செ.தேன்மொழி)
நீர்வழங்கல் அதிகார சபைக்கு சொந்தமான நீர் அளவு மானிகளுடன் கைது செய்யப்பட்ட தெரணியகலை பிரேதசபைத் தலைவர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
தெரணியகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புருகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், நீர்வழங்கல் வேலைத்திட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த 477 நீர் அளவு மானிகள் காணாமல் போயுள்ளதாக கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியிலாளர் தெரணியகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , களஞ்சியசாலையின் எழுதுவிளைஞர் ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்யதிருந்தனர். இந்நிலையில் , காணாமல் போயிருந்த நீர் அளவு மானிகளில் , 98 மானிகள் தெரணியகலை பிரதேச சபைத் தலைவரிடமிருந்த கைப்பற்றப்பட்டதுடன் , பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை சந்தேசக நபர் அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது நீதிவான் அவரை நாளைமறுதினம் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM