தெரணியகலை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 3

17 Apr, 2021 | 07:35 PM
image

(செ.தேன்மொழி)

நீர்வழங்கல் அதிகார சபைக்கு சொந்தமான நீர் அளவு மானிகளுடன் கைது செய்யப்பட்ட  தெரணியகலை பிரேதசபைத் தலைவர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தெரணியகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புருகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், நீர்வழங்கல் வேலைத்திட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த 477 நீர் அளவு மானிகள் காணாமல் போயுள்ளதாக  கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியிலாளர் தெரணியகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , களஞ்சியசாலையின் எழுதுவிளைஞர் ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்யதிருந்தனர். இந்நிலையில் , காணாமல் போயிருந்த நீர் அளவு மானிகளில் , 98 மானிகள் தெரணியகலை பிரதேச சபைத் தலைவரிடமிருந்த கைப்பற்றப்பட்டதுடன் , பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை சந்தேசக நபர் அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது நீதிவான் அவரை நாளைமறுதினம் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22