இலங்கையில் வனப்பகுதியை பாதுகாப்பதை இலக்காகக் கொண்டு , 'சுற்றுச் சூழலை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் 20 இலட்சம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் றாகம - தியகல சிறுவர் பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்பினைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.40 சுப நேரத்தில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் , அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கண்காணிப்பின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' வேலைத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்குள் 20 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்குள் 5 இலட்சம் மரக்கன்றுகளை நாட்ட எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பஹா மாவட்டத்தில் வனப்பகுதிகள் குறைவாகக் காணப்படுவதால் , அந்த மாவட்டத்தில் நிலப்பரப்புக்களை தேர்ந்தெடுத்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM