(எம்.ஆர்.எம்.வசீம்)
புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெற்ற திடீர் விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 309 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்களான கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஏற்பட்ட திடீர் விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு 309பேர் அனுமதி்க்கப்பட்டனர்.
அத்துடன் இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் விபத்தானது கடந்த வருட புத்தாண்டு தினங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் 39 வீத அதிகரிப்பாகும். கடந்த வருடம் குறித்த இரண்டு தினங்களிலும் திடீர் விபத்துக்கள் என 188 சம்பவங்களே அறிக்கையிடப்பட்டிருந்தன.
மேலும் இம்முறை இடம்பெற்றுள்ள திடீர் விபத்துக்களில் அதிகமானவை வீதிகளில் இடம்பெற்றிருப்பதாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் மொத்த எண்ணிக்கை 77ஆகும். அதேபோன்று விழுந்ததன் மூலம் 73 சம்பவங்களும் தொந்தரவு மற்றும் தாக்குதல் என 38 சம்பவங்கள் இடம்பெற்றிக்கின்றன.
இருந்தபோதும் தீ விபத்து சம்பவம் 4 மாத்திரமே அறிக்கையிடப்பட்டிருக்கின்றதுடன் இந்த சம்பவங்கள் அனைத்தும் கவனயீனம் காரணமாக இடம்பெற்றவையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM