"E-Kalvi Charity Fund Inc. also known as JUGA - Victoria” இன் வழிகாட்டலில் டிக்கோயா போர்டைஸ் த.வி இல் அமைக்கப்பட்டுள்ள மறைந்த கணித ஆசான் ஜீவராஜன் நினைவு மின்வழிக்கற்கை மையம் ( Sir K. Jeevarajan Fordyce e-Kalvi Center) மற்றும் திறன் வகுப்பறை ( smart classroom) திறப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை (17/04/2021) காலை 10 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரு P. ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
ஹட்டன் வலய கல்விப்பணிப்பாளர் திரு P. ஸ்ரீதரன் பிரதம அதிதியாக பங்கேற்கும் இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக பொறியியற் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி S.K. நவரட்ணராஜா சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பிக்கிறார்கள்.
இந்த திறன் வகுப்பறைக்கான இணை அனுசரணையை அன்புநெறி (அமெரிக்கா) மற்றும் ரட்ணம் அறக்கட்டளை (பிரித்தானியா) ஆகியோர் வழங்கியுள்ளனர். கலாநிதி நவரட்ணராஜா அவர்கள் இந்த ஜீவராஜன் நினைவு மின்வழிக் கற்கை அமையத்தின் ஒருங்கிணைப்பாளராவார்.
கொரோனா காலப்பகுதியில் இந்த மின்வழிக் கற்கை அமையம் ஊடாக இரண்டு கட்டங்களாக மொத்தமாக 45 பாடசாலைகளுக்கு மின்வழிக் கற்கை காணொளிகளை உள்ளடக்கிய ஏறக்குறைய 400 Pen Driveகள் (32GB அளவு) வழங்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளில் உதவி புரியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM