நௌபர் மௌலவியை பிரதான சூத்திரதாரியாக காண்பித்து அரசாங்கம் இயலாமையை மறைக்க முயற்சி - வஜிர

Published By: Digital Desk 2

14 Apr, 2021 | 03:18 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரு வருடங்களாகின்றன. ஆனால் அரசாங்கம் போலிக்காரணங்களை கூறி உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

பிரதான சூத்திரதாரியாக நௌபர் மௌலவியை அறிவிப்பதன் பின்னணியின் ஊடாக அரசாங்கத்தின் இயலாமையை மறைத்துக்கொள்ள முற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வஜிர அபேவர்தன மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்காத நௌபர் மௌலவி சஹ்ரானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அவரிடமிருந்து விலகியவராவார்.

தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் எமது அரசாங்கத்தில் இவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது இந்த தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போதைய அரசாங்கம் இவரையே பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளது. அவ்வாறெனில் ஏன் இவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவில்லை? இதில் யாருடைய அழுத்தம் தாக்கம் செலுத்துகிறது? நௌபர் மௌலவியை கைது செய்வதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பில் அரசாங்கம் நிச்சயம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16