(எம்.மனோசித்ரா)
புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை நாளைய தினம் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் பாதிப்பிற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏழு பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் இதனைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த கொடுப்பனவு ஒரு பயனாளி குடும்பத்திற்கு ஒரு பிரிவின் கீழ் மட்டுமே வழங்கப்படும் என்று இந்த கொடுப்பனவு தொடர்டபாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஒரு வீட்டு குடும்பத்திற்கு உட்பட்டதாக வீட்டு குடும்ப தலைவரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பிரதான குடும்ப அலகிற்கும் பிரதான குடும்ப அலகிற்கு மேலதிகமாக இணைந்த குடும்பம் என்ற ரீதியில் வாழும் குடும்பத்திற்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM