(இராஜதுரை ஹஷான்)
இலங்கை சீன அபிவிருத்தி வங்கி ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சீனாவிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கொஹன்ன இந்த ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டுள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அந்திய செலாவநியை ஊக்குவிக்கும் வகையில் குறித்த கடன் தொகையை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடன் தொகை தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வொப்பந்தம் தொட்பில் சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கொஹன்ன குறிப்பிடுவதாவது,
இலங்கையின் பொருளாதாரத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கில் சீனா அரசாங்கம் இக்கடன் தொகையினை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இக்கடன்தொகை பெறுவதன் ஊடாக இலங்கையின் முதலீடுகளை மேற்கொள்ளும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதுடன், டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். நெருக்கடியான சூழ்நிலையில் நட்பு நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கைக்க இக்கடன் தொகையினை வழங்கவுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6 இலட்சம் கொவிட்-19 வைரஷ் தடுப்பூசிகள் சீனாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
சந்தைப்படுத்தல், முதலீடு, சுற்றுலா மற்றும் விளையாட்டு ,கல்வி ஆகிய துறைகள். ஊடாக இரு நாடுகளுக்கிடையில் இரு தரப்பு உறவினை மேம்படுத்த இலங்கையுடன் தொடர்புக் கொள்ள தூதுவர் சீனாவிற்கு அழைப்பு விடுத்தார்.
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர் சீன நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளார்கள்.
சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரக காரியாலயத்தில் இலங்கை உற்பத்திகளை சீன நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தல், சீன நாட்டு முதலீடுகளை இலங்கையில் துரிதப்படுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும்.
இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவினால் கடந்த வருடம் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலரின் இரண்டாம் பகுதியாகும். இந்நிதியை பெற்றுக் கொள்வதற்கு சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் உரிய சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM