சிரேஷ்ட உறுப்பினர்கள் 3 பேருக்கு அமைச்சு பதவி

Published By: Digital Desk 3

12 Apr, 2021 | 02:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ். பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கு புத்தாண்டுக்கு பிறகு அமைச்சரவை அமைச்சு பதவி அல்லது இராஜாங்க அமைச்சு பதவிகளை  வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளுக்கும்  இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில்  இவ்வாறு   அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளமை கவனிக்கத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரோ, எஸ். பி .திஸாநாயக்க மற்றும் அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி  அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டார்கள். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 52 நாள் இடைக்கால அரசாங்கத்தில் இவர்களுக்கு    அமைச்சவை மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31