ஜேர்மனிய அணுசக்தி பரிசோதனையின் போது விசேடமான அதி வெப்பமான வாயு ஒன்று தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
மேற்படி வாயுவானது புதிய தூய மற்றும் மலிவான சக்தியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான நம்பிக்கையைத் தருவதாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஐதான முகில் போன்ற ஏற்றமுள்ள துணிக்கைகளைக் கொண்ட இந்த ஹீலியம் பிளாஸ்மா வாயுவானது ஒரு செக்கனில் பத்தில் ஒரு பங்கு நேரத்துக்கு மட்டுமே நீடித்துள்ளது. இதன்போது சுமார் ஒரு மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலை தோன்றியுள்ளது.
சூரிய சக்தியைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய உறுதியான அணுசக்திப் பிறப்பாக்க உபகரணங்களை உருவாக்கும் முயற்சியில் உலகமெங்குமுள்ள பௌதிகவியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே இந்த சாதனை சக்திப் பிறப்பாக்கம் இடம்பெற்றுள்ளது.
வட கிழக்கு ஜேர்மனியில் கிரெய்ப்ஸ் வால்ட் எனும் இடத்தில் வென்டல்ஸ்டெயின் 7–-எக்ஸ் என்றழைக்கப்படும் இயந்திரத்திலேயே இவ்வாறு அதிகளவான வெப்ப சக்தி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்ஸ் பிளாங் நிறுவகத்தால் செயற்படுத்தப்படும் இந்த அணுசக்தித் திட்டம் 9 வருடங்களுக்கு முன் 720 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான செலவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான அணுசக்தி திட்டமாக பிரான்ஸின் கடாராச்சி எனும் இடத்திலுள்ள இதெர் விளங்குகிறது. ஆனால் மேற்படி சர்ச்சைக்குரிய திட்டம் 2020 ஆம் ஆண்டு வரை சக்திப்பிறப்பாக்க நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதற்கான சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த திட்டத்திற்கு ஏற்கனவே 10 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம் செலவி டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM