இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்த அந்தநாட்டு உற்பத்தி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக 60 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்தே தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் அஸ்ட்ரா செனேகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவக்ஸ் திட்டத்துக்கு அனுப்பப்படும் தடுப்பு மருந்தின் அளவு பெரும் அளவில் குறைந்து விட்டது.
உலகில் உள்ள சில ஏழை நாடுகள் உள்ளிட்ட 60 நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் போடப்படுவது நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கு 2 ஆவது டோஸ் செலுத்த மருந்து இல்லை. தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக அதன் விநியோகம் கடந்த 5 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து விநியோகங்களும் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நிறுத்தப்படலாம் எனவும் இதனால் ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பு மருந்துகளை வாங்கும் உலக நடவடிக்கைகளை சுகாதார அமைப்பு விரைவுபடுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM