தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மேலும் காலதாமதத்திற்குள் ஆக்கிவிடக்கூடாது. ஆகவே நாளை காலை 11.30 மணியளவில் (இன்று செவ்வாய்க்கிழமை) சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இதன்போது இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தையை இறுதியாக்கி கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந் நாட்டில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான உழைக்கும் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கக் கூடிய அதிகரித்த சம்பளத்தை இல்லாது செய்வதற்கு இடமளிக்காது இரு தரப்பினரும் கைச்சாத்திடுவர் என எதிர்பார்க்கிறேன் என்று தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை திலகராஜ் எம்.பி.யினால் கொண்டுவரப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை பெற்றுக் கொடுத்து வருகின்றனர் என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை. இவர்களது சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி திலகராஜ் எம்.பி.யினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையானது காலத்தின் தேவையாகும்.
இவர்களது சம்பள நிர்ணயமானது கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ளும்போது அவர்கள் நிபந்தனைகளை உள்வாங்கிக் கொள்ள முடியும். இதனூடாகவே தொழிலாளிகளின் இரண்டு வருடங்களுக்கான சம்பளம் உள்ளிட்ட ஏனைய விடயங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. இவ்விடயத்தில் ஒருபோதும் அரசாங்கம் தலையிட்டிருக்கவில்லை. இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அதில் குறைபாடுகள் இல்லாதிருப்பின் தொழில் ஆணையாளர் கைச்சாத்திட்டு உறுதிப்படுத்துவதை மட்டுமே மேற்கொள்வார்.
மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ள இவ் ஒப்பந்த செயல்முறையானது மீண்டும் கைச்சாத்திடப்படுவதற்கு இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோதும் அது முடிவுக்கு வரவில்லை. இது தொடர்ந்தும் காலதாமதமாகியதால் முன்னர் இருந்த தொழில் அமைச்சர்கள் பேச்சுக்களை நடத்தினர். தற்போது நான் அமைச்சுப் பதவி ஏற்ற பின்னர் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி இரு தரப்பினரையும் அழைத்து நான்கு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதன்போது சில தொழிற்சங்கங்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத சில யோசனைகளை முன்வைத்தன.
எனினும் இன்றைய பெருந்தோட்ட உற்பத்திகளான தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் விலைகள் உள்ளூர் சந்தையிலும் சர்வதேச சந்தையிலும் வீழ்ச்சியடைந்துள்ளன. சில இறப்பர் தொழிற்சாலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நடைமுறை சிக்கலை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் 1000 ரூபா சம்பளத்தை கோரி நின்றனர். இதன் காரணத்தினாலேயே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் கடந்த எட்டு மாதங்களாக காலதாமதமாகின.
நியாயமான சம்பளத் தொகையை பெற்றுக் கொடுக்கும் இடத்துக்கு நாம் வர வேண்டும். அதுவே நியதியுமாகும். இதனைப் பேச்சுவார்த்தையினூடாகவே மேற்கொள்ள வேண்டும். எனினும் அவ்வாறான நிலைமை உருவாகி வரவில்லை. எனினும் இதனை மேலும் காலதாமதத்திற்குள் ஆக்கிவிடக்கூடாது என்ற காரணத்தினால் நாளை காலை 11.30 மணியளவில் (இன்று செவ்வாய்க்கிழமை) சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இதன்போது இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தையை இறுதியாக்கி கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள்தான் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுபவர்கள். ஆகவே இந் நாட்டில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான உழைக்கும் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கக் கூடிய அதிகரித்த சம்பளத்தை இல்லாது செய்வதற்கு இடமளிக்காது இரு தரப்பினரும் கைச்சாத்திடுவர் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இது தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய அழுத்தமாகவும் இருந்து வருகின்றது.
அனைத்து பகுதிகளிலும் இருந்து
கிடைக்கும் தகவல்களின் அடிப்
படையில் தோட்டத் தொழிலாளர் கள் இவ்விடயத்தில் ஒரு வித கலக்க நிலையில் இருப்பது தெரிகிறது. மேலும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். பல தட
வைகள் என்னுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பேசியுள்
ளார். தொழில் அமைச்சர் என்ற வகையில் நானும் எனது அர்ப் பணிப்பை வெளிக்காட்ட விழை கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM