(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதில் அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக, ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளனர். நௌபர் மௌலவி சஹ்ரானின் சகாவாக இருந்துள்ளாரே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் சஹ்ரானின் தலைவராக செயற்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சி மீது பழிசுமத்துவதை தவிர்த்து அதன் பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளனர்.
நௌபர் மௌலவி சஹ்ரானின் சகாவாக இருந்துள்ளாரே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் சஹ்ரானின் தலைவராக செயற்படவில்லை. அவர் இந்த தாக்குதலை ஏற்பாடு செய்தார் என்பதற்கு எவ்வித சாட்சியும் இல்லை. எவ்வாறிருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தடுக்க முடியாமல் போனது. 2015 க்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்துடன் சஹ்ரான் தொடர்புகளைக் கொண்டிருந்தார். இது தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படாமல் அரசாங்கம் போலியாக செயற்படுகிறது என்றார்.
இதன் போது ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் கருத்து தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ,
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனை தொடர்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. நாம் அறிந்த சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக இத்தகையதொரு கடூழிய தண்டனை வழங்க முடியும் என்று நாம் நம்பவில்லை என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM