உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதில் அரசு தோல்வி - சரத் பொன்சேக்கா

Published By: Digital Desk 3

10 Apr, 2021 | 09:32 AM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதில் அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக, ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளனர். நௌபர் மௌலவி சஹ்ரானின் சகாவாக இருந்துள்ளாரே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் சஹ்ரானின் தலைவராக செயற்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சி மீது பழிசுமத்துவதை தவிர்த்து அதன் பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளனர்.

நௌபர் மௌலவி சஹ்ரானின் சகாவாக இருந்துள்ளாரே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் சஹ்ரானின் தலைவராக செயற்படவில்லை. அவர் இந்த தாக்குதலை ஏற்பாடு செய்தார் என்பதற்கு எவ்வித சாட்சியும் இல்லை. எவ்வாறிருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தடுக்க முடியாமல் போனது. 2015 க்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்துடன் சஹ்ரான் தொடர்புகளைக் கொண்டிருந்தார். இது தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படாமல் அரசாங்கம் போலியாக செயற்படுகிறது என்றார்.

இதன் போது ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் கருத்து தெரிவித்த  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ,

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனை தொடர்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. நாம் அறிந்த சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக இத்தகையதொரு கடூழிய தண்டனை வழங்க முடியும் என்று நாம் நம்பவில்லை என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59