(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் முதலைக்கண்ணீர் வடிக்கின்றது. ஆனால் இரண்டு வருடங்களாகியும் தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் பாேயிருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஆறாவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற இரண்டு வருடங்கள் ஆகின்றபோதும் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கின்றது. ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்களே தவிர தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறி இருக்கின்றது.
மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் தேசிய வளங்களை பாதுகாப்பதாகவும் தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் நாட்டின் தேசிய வளங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன் பாரம்பரிய மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியாத நிலைக்கு அரச அதிகாரிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதற்கு எதிராக குரல் கொடுக்கும் அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
அத்துடன் மக்கள் பாரிய எதிர்பார்ப்புடனே இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால் வாக்களித்த மக்களுக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்த எதனையும் நிறைவேற்றவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால் மக்கள் இன்று தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிந்திப்பதில்லை. மாறாக உயிர்வாழ்வதற்கு தேவையான சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்றே சிந்திக்கின்றனர். பாரியளவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கின்றது. பொருட்களின் விலை அதிகரித்திருக்கின்றது.மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை.
அதேபோன்று மக்களுக்கு இன்று சந்தைக்கு சென்று நம்பிக்கையுடன் எந்த உணவுப்பொருளையும் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கம் இந்த புத்தாண்டு காலத்தில் மக்கள் சந்தைகளில் நம்பிக்கையுடன் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் சூழலை ஏற்படுத்தவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM