(செ.தேன்மொழி)
பண்டாரகம - பொல்கொட பகுதியில் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பை பெற்றுதருவாதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்கொட பகுதியில் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு பண மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை பண்டாரகம பகுதியில் நேர்முகப்பரிச்சையொன்றை நடத்தியுள்ளதுடன் இதன்போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
தெஹிவலை மற்றும் பட்டகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 96 வெளிநாட்டு பயண பற்றுச்சீட்டுகளும் , ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 390 ரூபாய் பணமும் மீட்க்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து இதற்கு முன்னரும் இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM