ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களின் நிலைமை குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று முறையாக முடிவுசெய்துள்ளதாக இஸ்ரேல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர்கள் மார்ச் 3 ஆம் திகதி இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களின் நிலைமை குறித்து முழு விசாரணையைத் திறந்துவிட்டதாக அறிவித்தனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்க இஸ்ரேலுக்கு ஏப்ரல் 9 (இன்று) வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்த காலக்கெடுவிற்கு முன்னர் நாட்டின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விசாரணைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது என்றும் அதற்கான பதிலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்பும் என்றும் வியாழக்கிழமை பிற்பகுதியில் கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி "இஸ்ரேல் போர்க்குற்றங்கள் செய்கிறது என்ற கூற்றை முற்றிலுமாக நிராகரிக்கிறது" என்றும் அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு "ஹேக் தீர்ப்பாயத்திற்கு விசாரணையைத் திறக்க அதிகாரம் இல்லை என்ற இஸ்ரேலின் தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது".
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM