ஆணைக்குழு விசாரணைக்கு கூட அழைக்கப்படாத நௌபர் மௌலவி எவ்வாறு பிரதான சூத்திரதாரியாவார் - வஜிர அபேவர்தன

Published By: Digital Desk 3

09 Apr, 2021 | 09:59 AM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்குக் கூட அழைக்கப்படாத நௌபர் மௌலவி திடீரென எவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியானார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கேள்வியெழுப்பினார்.

நௌபர் மௌலவியை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் எவை என்பது தொடர்பிலும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திதாரி நௌபர் மௌலவி என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற அன்றை தினம் இரவு நல்லாட்சி அரசாங்கத்தால் நௌபர் மொளலவி கைது செய்யப்பட்டார். இந்த சந்தேகநபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் சஹ்ரானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக அவரிடமிருந்து விலகியமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுக்க விருப்பமின்மையை வெளிப்படுத்தி சஹ்ரானிடமிருந்து விலகிய நௌபர் மௌலவி , பிரதான சூத்திரதாரி என்றால் அவர் நிச்சயம் உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் யாருடைய அழுத்தத்தின் காரணமாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளிலுள்ள நபர்கள் மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவு தொடர்பில் ஆராயுமாறு உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , நௌபர் மௌலவியை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் எவை என்பது தொடர்பிலும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44