வெளிநாடுகளிலிருந்து போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட ஐந்து பொதிகளிலிருந்து ஒரு தொகை போதைப்பொருட்கள் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் நேற்று மாலை கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதியானது 7 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொதிகள் வெரஹேர, ஹோமாகம மற்றும் கண்டி பகுதிளைச் சேர்ந்த முகவரிகளுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஊடகங்கள் முன்னிலையில் குறித்த பொதிகளை சுங்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று மாலை திறந்தனர்.
அவற்றிலிருந்து 4 மில்லியன் ரூபா பெறுமதியுடைய குஷ் எனப்படும் 278 கிராம் கஞ்சாவையும், 3 மில்லியன் ரூபா பெறுமதியான 'எக்ஸ்டஸி' என்று அழைக்கப்படும் 400 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருட்கள் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் பொலிஸ் போதைப்பொருள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM