மக்களை திசைத்திருப்பும் நடவடிக்கையில் அரசாங்கம் - திஸ்ஸ அத்தநாயக்க

Published By: Digital Desk 3

08 Apr, 2021 | 03:10 PM
image

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குக் கட்டளை வழங்கியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதைப் புறந்தள்ளி, இவ்விடயம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் அக்கறையைத் திசைதிருப்புவதற்கான நடவடிக்கைகளே தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார்? அதற்கான கட்டளைகள் யாரால் வழங்கப்பட்டன? இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார்? ஆகிய கேள்விகளுக்கான பதில்களையே பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள். எனினும் அந்த எதிர்பார்ப்பு இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்நிலையில் நௌபர் மௌலவியே உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என்ற கருத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ளார். எனினும் இதிலிருந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக இதனை வேறுபக்கம் திசைதிருப்புவதற்கு முயற்சிப்பது தெளிவாகின்றது.

ஆகவே இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் யார் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரமன்றி, யார் கட்டளைகளை வழங்கினார்கள் என்பதும் கண்டறியப்பட வேண்டும். எனினும் இதுபற்றி தெளிவுடன் அரசாங்கம் செயற்படவில்லை. உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதைப் புறந்தள்ளி, இவ்விடயம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் அக்கறையைத் திசைதிருப்புவதற்கான நடவடிக்கைகளே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இதுவிடயத்தில் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நிலவும் மந்தகரமான நிலையே பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றது என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27