10 ஆம் திகதி விசேட கண்காணிப்பு -  அஜித் ரோஹண

Published By: Digital Desk 4

06 Apr, 2021 | 08:34 PM
image

(செ.தேன்மொழி)

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்காக எதிர்வரும் சனிக்கிழமை முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் - அஜித்ரோஹண | Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை முதல் பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கவுள்ளனர். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளும் பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பண்டிகைக்கால நிகழ்வுகளின் போதோ , வேறொரு பணிக்காகவோ வெளியில் செல்லும் போது மது போதையில் இருக்கும் சாரதிகளின் வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதன்போது மதுபானம் அருந்தாத சாரதிகளின் வாகனங்களை பயன்படுத்துவதே சிறந்தது.

வாகன விபத்துகள் காரணமாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 7 பேர் நேற்று இடம்பெற்ற விபத்திலும் , எஞ்சிய இருவர் அதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் , முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் மற்றும் இரு பாதசாரதிகளும் உள்ளடங்குகின்றனர்.

தற்போது நாள் ஒன்றுக்கு 7 -8 பேர் வரை வாகன விபத்துகளினால் உயிரிழப்பது சாதாரண விடயமாக மாறியுள்ளது.  இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

அதன் காரணமாகவே மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. இதன்போது போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் கண்காணிப்படுவதுடன் , அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் குற்றம் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டால் , அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11