கிரீடம் பறிக்கப்பட்ட அழகி அநீதிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு : வைத்தியசாலைக்கும் சென்றார்

Published By: Digital Desk 4

06 Apr, 2021 | 05:50 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

2021 ஆம் ஆண்டுக்கான  இலங்கையின் திருமணமான அழகு ராணிக்கான  போட்டியில் வெற்றி பெற்று முடிசூடிய போது, தற்போதைய  உலக திருமணமான அழகு ராணி அதனை பலவந்தமாக பறித்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தை அணிவித்ததாக கூறி  புஸ்பிகா டி சில்வா எனும்  பெண் கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

No description available.

தனக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை  இவ்வாறு பலவந்தமாக வேறு போட்டியாளர் ஒருவருக்கு  அணிவித்ததாக தெரிவித்தே குறித்த போட்டியின் முடி சூடும் விழா நிறைவடைந்த பின்னர் தனது பெற்றோருடன்  திங்கட்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் அவர் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிரீடம் பறிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புப்பட்ட உலக திருமணமான அழகி உள்ளிட்டோருக்கு எதிராகவே அவர் இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார்.

பொலிஸ் முறைப்பாட்டை தொடர்ந்து கிரீடம் பறிக்கப்படும் போது தனது தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்து புஸ்பிகா டி சில்வா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

No description available.

2021 ஆம் ஆண்டுக்கான  இலங்கையின் திருமணமான அழகியை தெரிவு செய்யும் போட்டி தாமரை தடாகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இதன் போது இறுதி போட்டியில்  புஸ்பிகா டி சில்வா எனும் பெண்  இலங்கையின் திருமணமான அழகி எனும் மகுடத்தை சூடினார். அவ்வாறு கிரீடம் அணிவிக்கப்பட்டு  சில விநாடிகளில் புஸ்பிகாவிடமிருந்து  அந்த கிரீடம் பறிக்கப்பட்டது. 

உலக திருமணமான அழகி கரோலின் ஜூரி அக்கிரீடத்தை புஸ்பிகாவிடமிருந்து பறித்து இரண்டாமிடத்தை பிடித்த போட்டியாளருக்கு அணிவித்திருந்தார்.

புஸ்பிகா டி சில்வா திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால் போட்டி விதிமுறைகளின் பிரகாரம் அவர் திருமணமான அழகியாக முடி சூட முடியாது என கூறியே குறித்த கிரீடம் பறிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தான் விவாகரத்து பெறவில்லை என்றும் தனிப்பட்ட காரணங்களால் தற்போது தனது தனியாக மகனுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் திருமணமான அழகியை தெரிவு செய்தவதற்காக நடத்தப்பட்ட போட்டி பரபரப்பாக  பேசப்பட்டது.

இந்நிலையில் குறித்த போட்டியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான சந்திமால் ஜயசிங்க ,திருமணமான அழகி பட்டத்தை புஸ்பிகா டி சில்வாவிற்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று பிற்பகல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33