கொவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா எந்த தடையும் விதிக்கவில்லை என்று இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், புது டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 2021 ஏப்ரல் 2 அன்று கொவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை என்று தெளிவாகக் கூறியதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் 80 நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட முறையாக அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொவிட் 19 தடுப்பூசிகள் இலங்கையில் உள்ள பயங்கரமான தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி திட்டங்களுக்கு முதன்மையாக தொடங்கப்பட்டது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியின் 1.25 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நாடும் தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடும்போது வேறு நாடுகளுக்கு இந்த அளவு தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ளவில்லை.
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசிகளின் உற்பத்தி உள்நாட்டு தேவை மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்காக மேலும் அதிகரித்து வருகிறது என்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தடுப்பூசியின் ஏற்றுமதி குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளதாவது,
“கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தை இந்தியா அமல்படுத்தியுள்ளது.
“இந்தத் திட்டத்திற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
“அதன்படி, இத்திட்டத்தின் மூலம் 80 நாடுகளுக்கு மேலாக சுமார் 6 கோடியே 44 லட்சம் தடவை போடக்கூடிய தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளது.
“இதனால் இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் என்று பயப்படத் தேவையில்லை. உள்நாட்டின் தடுப்பூசித் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே வெளிநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். இதனை உலக நாடுகள் சரிவர புரிந்துகொள்ளும் என்று நம்புகிறோம்.
“எனவே வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் எந்தவொரு தடையும் பிறப்பிக்க வில்லை. இந்தியாவின் பயன் பாட்டுக்குப் போக எஞ்சி இருப்பவை தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM