சத்தீஸ்கரில் சனிக்கிழமை மாவோயிஸ்ட்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையானது 22 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 30 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
சத்தீஸ்கரில் பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் உள்ள ஒரு காட்டிலே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மாவோயிஸ்ட்டுகளுடனான கடுமையான துப்பாக்கிச் சூட்டில் சனிக்கிழமை ஐந்து பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் போன வீரர்களில் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதன் மூலம் மோதலில் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சத்தீஸ்கரின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதேநேரம் மோதலுக்கு பின்னர் பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து மாவோயிஸ்ட்டுகளினால் இரண்டு டஜன் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் சம்பவ நடந்த இடத்திலிருந்து 15 மாவோயிஸ்ட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன மற்றும் 20 மாவோயிஸ்ட்டுகள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்புக்கு
சத்தீஸ்கரில் நக்சல் பதுங்கியிருந்த 22 பாதுகாப்புப் படையினரின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM