(செ.தேன்மொழி)
நாவுல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வெடி மருந்துகளை கொண்டு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவுல- எலஹெர வீதியில் நேற்று சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே வெடி மருந்துகளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 24 -43 ஆகிய வயதுடைய நான்கு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 கிராம் வோடர் ஜெல் , 20 கிராம் வெடி மருந்து , 14 டெட்டனேட்டர்கள் உட்பட பல்வேறு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாவுல பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM