கொரோனா தொற்றிலிருந்து மேலும் 320 பேர் குணமடைவு

Published By: Digital Desk 3

03 Apr, 2021 | 04:14 PM
image

நாட்டில் இன்று (03.04.2021) மேலும் 320 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90,021  ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 93,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள  நிலையில், அதில் 2,532 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 360 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 575 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்