(செ.தேன்மொழி)
மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய , நான்காவது நாளாக இன்று காலை ஆறு மணிவரையில் 8,957 குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
நாடளாவிய ரீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையானது இன்று சனிக்கிழமை வரை இடம்பெற்றிருந்தது.
அதற்கமைய இன்று காலை வரை மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் 8,957 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மது போதையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியதாக 264 பேரும் , மிக வேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டியதாக 85 பேரும் , அதிகூடிய வேகத்தில் மோட்டார் சைக்கிள்களை ஊட்டியதாக 80 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைக்கவசம் அணியாமல் இருந்ததாக 1298 பேரும் , வீதி ஒழுங்கு விதிகளை முறையாக பேணாமை தொடர்பில் 2002 பேரும் , அனுமதிபத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 875 பேரும் , வேறுவகையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 4105 பேரும் , மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் பயணித்தமை தொடர்பில் 248 பேரும் இடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்புகளின் போது , போக்குவரத்துக்கு பொறுத்தமற்ற 295 மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கும் நோக்கத்திலேயே , இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய , பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM