உலகிலுள்ள 4 நாடுகளை இங்கிலாந்து அரசாங்கம் பயண தடை பட்டியலில் சேர்த்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இவ்வாறு 4 நாடுகளை இங்கிலாந்து சிவப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.
இங்கிலாந்து புதிதாக பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்காளதேஷ் ஆகிய நாடுகளை இவ்வாறு சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இங்கிலாந்தில் இதுவரை 43 இலட்சத்து 64 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்திற்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேலும் 4 நாடுகளுக்கு தற்போது இங்கிலாந்து தடை விதித்துள்ளது.
இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர ஏனைய நாட்டினர் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
குறித்த பயண தடையானது, இம்மாதம் 9 ஆம் திகதி காலை 4 மணியில் இருந்து அமுலுக்குவருவதாக இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை அமுலுக்கு வந்த பின்னர் அந்த நாடுகளில் இருந்து வரும் இங்கிலாந்து மக்கள் 10 நாட்கள் கட்டாயம் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM